ID: 202419
Wednesday, March 13, 2024
எப்போது நிரந்தர வேலை கிடைக்கும்?
Tuesday, March 12, 2024
திருமணம் எப்போது?
பொருளாதார நிலைமை குறித்தும், கடன்கள் எப்போது தீரும் என்பது குறித்தும்.
Wednesday, March 6, 2024
குல தெய்வ வழிபாட்டை விட்டு விடாதீர்கள்
அவன் சொன்னான்
இவன் சொன்னான்னு
குல தெய்வ வழிபாட்டை விட்டு விடாதீர்கள்.
அதுவே என்றும் நம்மை காக்கும்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
எனது ஜாதகம் சுத்த ஜாதகமா
SD
Sunday, March 3, 2024
எனக்கு எந்த தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும். எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.
Name: AJ D O B : 29 / 03 / 1991, 4.20 AM, KUMBAKONAM. எனக்கு எந்த தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும். எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.
பதில்: பங்குனி மாதம் பூரம் நக்ஷத்ரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது ராகு தசை புதன் புத்தி நடக்கிறது. கும்ப லக்னத்தில் சதயம் சாரம் பெற்று இருக்கிறீர்கள். தற்போதைய நேரம் மிகுந்த அலைச்சலையும் விரையத்தையும் உண்டாக்கலாம். அலுவலக மேலாண்மை போன்ற வேலை உங்களுக்கு கிடைக்கும். அதே போல் கன்சல்டண்ட், ஏற்பாட்டாளர் போன்ற வேலைகளும் சிறப்பாக இருக்கும். திருமணம் 2025ல் நடக்கும். நல்ல வாழ்க்கை அமையும். தினசரி முன்னோர்கள் வழிபாடு செய்யவும். குலதெய்வத்தை பிடித்துக் கொள்ளவும்.
#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan
Saturday, March 2, 2024
அரசாங்க வேலைக்கு அல்லது நிரந்தர பணிக்கு வாய்ப்பு உள்ளதா
பெயர்: க.ஜெ
Sunday, February 25, 2024
குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்.
ஷாலினி
D.O.F. 12.10.1989
Tlme. 9.24.p.m
Birth place. Pattukkottai
திருமணமாகி 6 வருடமாகிறது. குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்.
பதில்:
நீங்கள் பிறந்தது வ்ருச்சிக லக்னம் - அனுஷம் 3ம் பாதம் சாரம். புரட்டாசி மாதம் சதய நக்ஷத்ரத்தில் பிறந்துள்ளீர்கள். தற்போது சனி தசை ராகு புத்தி நடக்கிறது. சனி பகவான் தைரிய சுகாதிபதியாக இருக்கிறார். அவர் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் சாரம் பெற்று சிம்மத்தில் அம்சம் பெற்றார். இந்த வருடம் சித்திரையிலிருந்து அடுத்த சித்திரைக்குள் நல்லபடியாக குழந்தை கிடைக்கும். பரிகாரம் ஏதும் தேவையில்லை.
குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய குறிப்புகள்:
குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய குறிப்புகள்:
⦁ எந்த நக்ஷத்ரமும் நல்ல நக்ஷத்ரம்தான்
⦁ எந்த ராசியும் நல்ல ராசிதான்
⦁ எந்த லக்னமும் நல்ல லக்னம்தான்
⦁ எந்த கிரகமும் நல்ல கிரகம்தான்
⦁ யோகங்களை பெரிதாக பார்க்க வேண்டிய அவசியமில்லை
⦁ கரிநாள் – தனிய நாள் – பஞ்சகம் – ராகு காலம் – எமகண்டம் – குளிகை என எதுவும் பார்க்கவேண்டிய அவசியமில்லை.
⦁ குழந்தை பிறந்தவுடன் ஜோதிடரிடம் ஆலோசனை செய்து பெயர் வைக்கவும். முடிந்தவரை வீட்டிலுள்ள பெரியவர்களின் பெயரையோ அல்லது குல தெய்வத்தின் பெயரையோ வைக்கவும்.
⦁ குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் வாங்குவது அவசியம்
⦁ குழந்தை பிறந்தவுடன் ஏதேனும் தானம் செய்யவும்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
குரு பரம்பரை ஜோதிடம்
+91 7845 11 9542
Monday, February 19, 2024
கடந்த 3 நாட்களாக திருநெல்வேலி சீமையில் சுற்றிய போது சில தகவல்கள்
கடந்த 3 நாட்களாக திருநெல்வேலி சீமையில் சுற்றிய போது சில தகவல்கள்:
1. இன்னும் பல இடங்களில் சாலை வசதி சரியாகவில்லை.
2. பல குடும்பத்தினர் இன்னும் வெள்ளத்தின் கஷ்டங்களில் இருந்து வெளியே வரவில்லை.
3. பெரும்பாலான பொருட்கள் அனைத்துமே தொலைத்திருக்கிறார்கள்.
4. பலர் தொழிலை இழுத்து மூடி விட்டனர்.
5. கிட்டத்தட்ட 15 வருடங்கள் பின்னோக்கி இருப்பதை பார்க்க முடிகிறது.
6. பலருக்கு அரசு கொடுத்த 6000 நஷ்ட ஈடு பற்றவில்லை.
7. பலர் வாகனங்களை இழந்திருக்கிறார்கள்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542