Sunday, March 11, 2012

மேஷ ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை

மேஷ ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை 
                                
மேஷம் : அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்.  உண்மையால் உயரும் மேஷ ராசி வாசகர்களே ராசியில் சுக்கிரன், குரு, இரண்டில் கேது, ஐந்தில் செவ்வாய், ஏழில் சனி, எட்டில் ராகு, பதினொன்றில் புதன், பன்னிரெண்டில் சூரியன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள். மார்ச் 14ம் தியதி 6ம் இடத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி தனஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.

ராசிநாதன் செவ்வாய் ஐந்தில் இருக்க பாக்கியஸ்தானாதிபதி குரு ராசியில் இருக்கிறார்கள். துணிவும் உற்சாகமும் நிறைந்திருக்கும் காலமிது. தாங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களும் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது. தங்களது இளைய சகோதரத்தால் நிறைந்த லாபம் கிடைக்கும். வருமானம் பெருக வாய்ப்பிருக்கிறது. ராசியில் குரு சஞ்சரிப்பதாலும் ராசிநாதன் ஐந்தில் சஞ்சரிப்பதாலும் தெய்வ திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். ராசிநாதனின் ஐந்தாம் வீட்டு சஞ்சாரத்தால் விளையாட்டு துறைகளில் உள்ளவர்களுக்கு சாதனைகள் படைக்க வாய்ப்புண்டு. புத்திரர்கள், வாழ்க்கைத்துணை மற்றும் பெற்றோர்கள் வழிகளில் நல்ல ஆதாயம் பெற வாய்ப்புண்டு. இரண்டு, ஏழுக்குரிய சுக்கிரன் ராசியில் குருவுடன் இருக்க திருமணத் தடைகள் யாவும் நீங்கி மங்கள காரியங்கள் நடக்க வாய்ப்புண்டு. இசைத் துறையில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் லாபம் கிடைக்கும். மின்சாரம், இரசாயணம் தொழில் சார்ந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தொழில் காரணமாக வாங்கிய கடனை திரும்ப செலுத்துவீர்கள். கலைத் துறையினர் பெரும் புகழ் அடைய முடியும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பதவியினால் நெருக்கடி உண்டாகும். மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பில் வெற்றியடைவர்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 14, 15, 16

பரிகாரம்: சிவ வழிபாடு வெற்றியை தரும். அடிக்கடி சிவன் ஆலயங்களுக்கு சென்று வருவது நன்மையை தரும்.

No comments: