Sunday, March 11, 2012

ரிஷப ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை

ரிஷப ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதம்
தனது கவர்ச்சியான பேச்சால் கவர்ந்து இழுக்கும் ரிஷப ராசி வாசகர்களே ராசியில் கேது, நான்கில் செவ்வாய், ஆறில் சனி, ஏழில் ராகு, பத்தாமிடத்தில் புதன், பதினொன்றில் சூரியன், பன்னிரெண்டில் வியாழன், ராசிநாதன் சுக்கிரனுமாக நவநாயகர்கள் அமர்ந்து இருக்கிறார்கள். மார்ச் 14ம் தியதி 5ம் இடத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசிக்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.

சுகஸ்தானம் வலிமை பெற்றிருப்பதால் உடல்நலம் சிறக்கும். செவ்வாய் நான்கில் இருப்பதால் தாய், தாய் வழி உறவினர்கள் மூலம் வீண் செலவுகள் நேரிடலாம். பொருளாதார வளர்ச்சி ஏற்ற இறக்கமாகவே இருக்கும். சனி வக்ரகதி பெறுவதால் இளைய சகோதரத்துக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். புதிய வீடு கட்டும் பணியோ அல்லது நிலம் வாங்கும் பணியோ மேற்கொள்வீர்கள். எட்டுக்குடையவர் பன்னிரெண்டில் இருந்து ஆறு, எட்டு ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் மிக நல்ல பலன்களை தடையின்றி அனுபவிப்பீர்கள். திட்டமிட்ட சில காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வீண்பழி சுமத்தி உங்களை விட்டு பிரிந்து சென்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீண்டும் உங்களிடம் வந்து சேர்வர். இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். வேலையாட்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம்.

கலைத்துறையினர் வெளிநாடு பயணம் செல்வார்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பதவி மூலம் லாபம் கிடைக்கும். மாணவர்கள் தொழிற்கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 15, 16

பரிகாரம்: லக்ஷ்மி நரசிம்மரை ஆராதனை செய்யுங்கள். பேசும் வார்த்தையில் நிதானமும் இனிமையும் தேவை.

No comments: