Sunday, March 11, 2012

மீன ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை

மீன ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அடுத்தவரின் நிலையை எளிதில் புரியும் மீன ராசி வாசகர்களே ராசியில் சூரியன், இரண்டாமிடத்தில் ராசிநாதன் குரு, சுக்கிரன், மூன்றாமிடத்தில் கேது, ஆறாமிடத்தில் செவ்வாய், எட்டாமிடத்தில் சனி, ஒன்பதாமிடத்தில் ராகு, பன்னிரெண்டாமிடத்தில் சூரியன் என கிரக அமைப்பு உள்ளது. மார்ச் 14ம் தியதி களத்திர ஸப்தம ஸ்தானத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசியின் 3ம் இடத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.

தன வாக்கு குடும்ப ஸ்தானம் வலுப்பெற்றிருந்தாலும் தனஸ்தானாதிபதி செவ்வாய் ஆறாமிடத்தில் உலவுவது சிறப்பில்லை. எனவே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொள்ளவும். எனினும் அவர் யோககாரகர் என்பதனால் காரிய வெற்றி மற்றும் பெரும் பொருள் குவியும். எடுத்த செயல்கள், முயற்சிகள் யாவும் இன்னலின்றி முடியும். உடன் இருப்பவர்களால் எற்பட்ட தொல்லைகள் மறையும். சுப காரியங்களில் இதுவரை இருந்த சுணக்க நிலை மாறும்.தனஸ்தானாதிபதி விரையஸ்தானத்தை பார்ப்பதால் சில விரையங்களை கொடுக்கத்தான் செய்யும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். வீடு கட்டுவதற்கு இருந்த தடைகள் மாறும். தந்தையின் வியாபாரத்தில் சிறிது கவனம் தேவை. மிகுந்த நன்மை உண்டாகும். வேலை செய்யுமிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழிலில் எதிர்பாராத வகையில் பெரும் லாபம் கிடைக்கும்.

கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கைவரப் பெறும். அரசியலில் உள்ளவர்களுக்கு மனதிலுள்ள எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை.


சந்திராஷ்டம நாட்கள்: இல்லை

பரிகாரம்: கந்த ஷஷ்டி கவசம் பாராயணம் செய்வது மிகுந்த நன்மையை தரும்.

No comments: