Sunday, March 11, 2012

மிதுன ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை

மிதுன ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை
மிதுனம்: (மிருகசீரிஷம் 3, 4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2 ,3ம் பாதம்) - நடத்தையில் சிரத்தையை கடைபிடிக்கும் மிதுன ராசி வாசகர்களே மூன்றில் செவ்வாய், ஐந்தாமிடத்தில் சனி, ஆறாம் இடத்தில் ராகு, ஒன்பதாமிடத்தில் ராசிநாதன் புதன், பத்தாமிடத்தில் சூரியன், பதினொன்றில் சுக்கிரன், வியாழன், பன்னிரெண்டில் கேதுவுமாக கிரக நாயகர்கள் அருளாசி வழங்குகின்றனர். மார்ச் 14ம் தியதி 4ம் இடத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி விரையஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.


லாப ஸ்தானத்தில் குரு, ராசிநாதன் புதன் பாக்கியஸ்தானத்தில் எனும் அமைப்பு உங்களது பொருளாதார நிலைமையை உயர்த்துவதாகும். வசதி வய்ப்புகள் அதிகரிக்கும். ராசி மற்றும் நான்காம் ஸ்தானத்திற்குரிய அதிபதி புதன் பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பது குழப்பங்கள் அகன்று குதூகலத்தை தரக்கூடிய அமைப்பாகும். நூதனப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். தாய் வழியில் இருந்த பிரச்சனைகள் அகன்று சந்தோஷம் பிறக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பர். குழந்தைகளின் கல்யாண தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பேரக்குழந்தைகளை பெறும் பாக்கியமும் சிலருக்கு கிட்டும். பன்னிரெண்டுக்குரிய சுக்கிரன் லாபஸ்தானத்தில் இருப்பதும், அவருடன் குரு இருப்பதும் நல்லது. பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். ஒன்பதுக்குரியவர் வக்ரகதியில் நான்காம் ஸ்தானத்திற்கு வருவதால் நிலம், மனை சம்பந்தமான தொந்தரவுகள் நீங்கும். தந்தையின் செல்வம் பெருகும். மேலும் யோகம் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு விருதுகள் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வில் நல்ல தேர்ச்சி கிடைக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 17, 18, 19

பரிகாரம்: ஸ்ரீ கணபதியை பூஜித்து வர நன்மையுண்டு. கோவில் திருப்பணிகளில் பங்கு பெறுங்கள். நன்மைகள் பயக்கும்.

No comments: