Sunday, March 11, 2012

மகர ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை

மகர ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை
மகரம்: (உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2) எடுத்த வேலைகளை திறம்பட செய்து முடிக்கும் மகர ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் புதன், மூன்றில் சூரியன், நான்காமிடத்தில் குரு, சுக்கிரன், ஐந்தாமிடத்தில் கேது, எட்டாமிடத்தில் செவ்வாய், பத்தாமிடத்தில் ராசிநாதன் சனி, லாபஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் பவனி வருகிறார்கள். மார்ச் 14ம் தியதி பாக்கியஸ்தானத்திற்கு வக்ரகதியில் ராசியாதிபதி சனியும், 29ம் தியதி ராசியின் பூர்வபுண்ணிய பஞ்சமஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.


குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். குறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்க வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும். ராசிநாயகன் ஒன்பதிலும் சுகஸ்தானத்தில் சுக்கிரனும் இருப்பதால் உலக வாழ்க்கை யோக வாழ்க்கை இரண்டிலும் சரி சமமான எண்ணங்கள் உண்டாகும். அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும். பாகப்பிரிவினை பிரச்சனைகளின்றி சுமூகமாக நடைபெறும். இளைய சகோதரம் குடும்ப பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டு லாபங்களை சேர்ப்பார். தந்தையின் செல்வாக்கால் வழக்கு வியாஜ்ஜியங்களிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகள் வழியில் கவனம் தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்கள் நாடு திரும்பி இங்கே தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிரிகளின் தொந்தரவுகள் இருக்கும் இடம் தெரியாமல் மறையும். சிலருக்கு பொருள்வரவும், தனவரவும் உண்டாகும். எதிர்பார்த்த உத்தியோக உயர்வு, இடமாறுதல் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பிரச்சனைகள் ஏற்படலாம். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள்.

கலைத்துறையினருக்கு வீண் வதந்திகள் ஏற்பட்டு மறையும். அரசியலில் உள்ளவர்களுக்கு மேலிடத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.

சந்திராஷ்டம நாட்கள்: இல்லை

பரிகாரம்: ஸ்ரீ சாஸ்தாவை வழிபடுங்கள். ஏகாதசி விரதம் கடைபிடியுங்கள்.

No comments: