Sunday, March 11, 2012

கும்ப ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை

கும்ப ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை
கும்பம்: (அவிட்டம் 3, 4, ஸதயம், பூரட்டாதி 1, 2, 3) சுகங்களை முழுமையாக அனுபவிக்கும் கும்ப ராசி வாசகர்களே ராசியில் புதன், இரண்டாமிடத்தில் சூரியன், மூன்றாமிடத்தில் குரு, சுக்கிரன், நான்காமிடத்தில் கேது, ஏழாமிடத்தில் செவ்வாய், ஒன்பாதமிடத்தில் சனி, பத்தாமிடத்தில் ராகு என கிரக நிலவரம் காணப்படுகிறது. மார்ச் 14ம் தியதி அஷ்டமஸ்தானத்திற்கு வக்ரகதியில் ராசியாதிபதி சனியும், 29ம் தியதி ராசியின் சுகஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.

களத்திர, பாக்கிய, லாப ஸ்தானங்கள் குருவினால் பார்க்கப்பட்டு புனிதமடைகின்றன. உபரி வருமானங்களால் மிகுந்த தன சேர்க்கை ஏற்பட்டு வீண் செல்வுகளை சமாளிப்பீர்கள். இளைய உடன்பிறப்புகளால் பொருள்வரவு அதிகரிக்கும். இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவீர்கள். அண்டை அசலாருடன் இருந்து வந்து பிணக்கு நிலை மாறும். தாயாரின் உடல் நலம் சீரடையும். மகிழ்ச்சியான செய்திகள் உங்களை வந்தடையும். வீடுகட்டும் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். ஏழில் செவ்வாய் வயிறு சம்பந்தமான உபாதைகள் வரலாம். எனவே விருந்து விழாக்களில் கலந்து கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆகார நியமங்களை அனுசரித்து செல்வதும் நல்லது. சொந்தமாக வீடு கட்டி குடியேறும் யோகம் உண்டு. குழந்தைகளிடம் சற்று கண்டிப்புடன் இருக்க வேண்டிய நேரமிது. கடன் சுமைகள் பூரணமாக குறையும்.
திருமணம் கூடி வருகிறது. வாழ்க்கைத்துணைவரால் தனவரவு அதிகரிக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் குடும்பத்துடன் வந்து இணையும் பொன்னான காலமிது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பெரிதும் பாராட்டுகள் கிடைக்கும். அரசியலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.


சந்திராஷ்டம நாட்கள்: இல்லை

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது நன்மையை தரும். ராம நாம ஜெபம் செய்வதும் நல்லது.

No comments: