Sunday, March 11, 2012

கடக ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை

கடக ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை



கடகம்: புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் - அனைவரையும் சமமாக நடத்தும் கடக ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் செவ்வாய், நான்காமிடத்தில் சனி, ஐந்தில் ராகு, எட்டாமிடத்தில் புதன், ஒன்பதாமிடத்தில் சூரியன், பத்தாமிடத்தில் வியாழன், சுக்கிரன், பதினொன்றாமிடத்தில் கேது என கோள்கள் ஆதிக்கம் இருக்கிறது. மார்ச் 14ம் தியதி தைர்யவீர்ய ஸ்தானத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி லாபஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.

குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். ஐந்திற்குரியவர் இரண்டில் அமர்ந்துள்ளதால் குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும். நான்குக்குடையவர் நான்காம் ஸ்தானத்தைப் பார்ப்பதால் அழகிய வீடு மற்றும் வாகன வசதிகள் பெருகும். நண்பர்களிடம் கருத்து மோதல்களை தவிர்ப்பது அவசியம். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை பிரச்ச்னையின்றி வந்து சேரும். விரையாதிபதி ஆயுள்ஸ்தானத்தில் பயணிப்பதால் வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு பொருள்வரவும், தனவரவும் அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு அதிகாரமிக்க பதவிகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.


சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 19, 20, 21

பரிகாரம்: வேல்முருகனை வழிபட குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்யலாம்.

No comments: