Sunday, March 11, 2012

சிம்ம ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை

சிம்ம ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1 ) அடுத்தவரின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் சிம்ம ராசி வாசகர்களே ராசியில் செவ்வாய், மூன்றில் சனி, நான்கில் ராகு, ஏழில் புதன், எட்டாமிடத்தில் ராசிநாதன் சூரியன், ஒன்பாதமிடத்தில் குரு, சுக்கிரன், பத்தாமிடத்தில் கேது என கிரக நாயகர்கள் பவனி வருகின்றனர். மார்ச் 14ம் தியதி தனஸ்தானத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசியின் தொழில் ஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார பிரச்சனைகள் உண்டாகாது. எனினும் ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். குடும்பத்தில் பிள்ளைகளை முன்னிட்டு விவாதங்கள் ஏற்படலாம். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள். தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமிபிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் திடீரென வசூலாகும். மூன்றாம் ஸ்தானத்திற்குடையவர் அவ்வீட்டிற்கு ஏழாம் ஸ்தானத்திலும் அந்த ஸ்தானத்தை வியாழன் பார்ப்பதாலும் இளை சகோதரத்தின் திருமண ஏற்பாடுகள் தங்கு தடையின்றி நடைபெறும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு மக்களின் நன்மதிப்பும் நற்சான்றிதழும் கிடைக்கும். நான்காம் ஸ்தானத்திற்குரிய மங்கள்காரகன் செவ்வாய் ராசியில் அமர்ந்துள்ளதால் நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. குழந்தைகள் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்புகளில் நாட்டம் செலுத்துவர். அந்நிய நாட்டு பயணங்கள் நீங்கள் எதிர்பார்த்திருந்த படியே கைகூடி வருகிறது. நண்பர்கள் உதவியால் மிகுந்த சிரமமான காரியம் ஒன்றை செய்து முடிப்பர். பணியில் உள்ளவர்களுக்கு இடமாறுதல்கள் வரலாம்.

கலைத்துறையினருக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவியும். அரசியலில் உள்ளவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு வரும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவர்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 21, 22, 23

பரிகாரம்: ஆதித்யஹ்ருதயம் சொல்வது மனநிம்மதியை தரும். ஸ்ரீ ராமபிரானை வழிபட செல்வங்கள் சேரும்.


No comments: