Thursday, May 16, 2013

2013 குரு பெயர்ச்சிப் பலன்கள் : மேடம்

நிகழும் மங்களகரமான விஜய வருஷம் உத்தராயனம் வருஷரிது 
வைகாசி மாதம் 14ம் தேதி (28-05-2013)
செவ்வாய்கிழமையும், கிருஷ்ண பஞ்சமியும், உத்திராடம் நக்ஷத்ரமும் 
சுப்ரம் நாம யோகமும் கௌலவ கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று உதயாதி 
மாலை 9.15க்கு தனுசு லக்னத்தில் ஸ்ரீகுரு பகவான்
 ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகின்றார்.






மேஷம்: அஸ்வினி, பரணி, கார்த்திகை-1ம் பாதம் மற்றும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.
தைரியமும் தன்னம்பிக்கையும் ஆர்வமுடன் லட்சிய நோக்குடன் தக்க விதத்தில் செயலாற்றி வாழ்க்கையில் சாதனைகள் புரியும்  மேஷ ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் தைரியக்காரகன் என்று போற்றப்படும் செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள்.  அற்ப ஆசைக்கு இடம்கொடுக்காதவர்கள். ஆனால் சற்று முன்கோபக்காரர்கள். வாக்குவன்மை நிறைந்தவர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானம் மற்றும் விரையஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரியவீர்ய ஸ்தானத்திற்கு இடம் பெயர்கிறார். மூன்றாம் இடத்தில் இருந்து உங்களுடைய களத்திரஸ்தானம், பாகியஸ்தானம், லாபஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் கேது ராசியிலும், களத்திரஸ்தான 7ம் ராசியில் சனி, ராகுவும் இருக்கிறார்கள்.
குரு பகவான் இது வரை உங்கள் ராசிக்கு 2-ம் இடமான ரிஷபத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்தார்.  இந்த நிலையில் 3-ம் இடமான மிதுனத்திற்கு செல்கிறார். அவரால் முன்பு போல் நற்பலனை தர முடியாது. பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது குரு குடும்பத்தில் பல்வேறு பிரச்சினையைஉருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும்.  தீயோர் சேர்க்கையால் அவதிகள் நேரிடலாம். இதைக் கண்டு அஞ்ச வேண்டாம். குரு இருக்கும் இடம் சாதகமாக இல்லாவிட்டாலும், குருவின் அனைத்துப் பார்வைகளும் சாதமாக அமையும். அதன்மூலமும் நன்மை கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம்பக்கத்தாரிடமும் வீண் பேச்சை தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. விருந்து விழா என்று சென்று வருவீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடும். குடும்பத்தில் சிற்சில பிணக்குகள் வரலாம் புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. குடும்ப பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதுநல்லது.இளைய சகோதர சகோதரிகளின் மூலம் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். நன்மைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும். பணப்ப பிரச்சனைகளில் உங்களை திக்குமுக்காட வைத்தாலும் அவ்வப்போது பணவரவிற்கு குறையிருக்காது. குடும்பச் செலவுகளை எப்படியும் சமாளிக்க வாழ்க்கைத்துணை உதவுவார்.
பூர்வீக பிதுரார்ஜித சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். ஜீவனம் சம்பந்தமான விஷயங்களில் காரியம், நேரம் நஷ்டம் ஆனாலும் அதை தாங்குவதற்குண்டான் வலுவை குரு உங்களுக்கு அளித்திடுவார். வளமும் வசதியும் அதிகரிக்கும். தம்பதியினர் இடையே அன்பு மேம்படும். உறவினர்கள் வகையில் இருந்துவந்த பிரச்சினை இருக்காது. பொருளாதாரத்தில் வளர்ச்சியை காணலாம். சிலர் புதிய சொத்துக்கள் வாங்கலாம். புதிய வாகனங்கள் வாங்கலாம்.
உடல்நலனை பொறுத்தவரை சுமாராக இருக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.  நீண்ட நாட்களாக இருந்து வந்த தேக்க நிலை மறையும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் தொய்வின்றி நடக்கும். ஏற்கனவே செய்த தவற்களை திருத்திக் கொள்ள பார்ப்பீர்கள். நல்வழி காட்ட நல்லவர்கள் வருவார்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த குறைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். கடன் வாங்க வேண்டி வந்தாலும் அனைத்தையும் திருப்பி அடைப்பதற்குண்டான வழிகளை குரு உங்களுக்குக் காண்பிப்பார். நஷ்டம் ஏற்படும் என நினைத்திருந்த மனக்கவலைகள் அனைத்தும் தீரும்.
உத்தியோகத்தில் வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலை பளு குறையும்.சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்க பெறுவர். இடமாற்ற பீதி மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலர் தொய்வு நிலையில் இருந்து விடுபடுவர். வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். வேலையில் சிலருக்கு வெறுப்பு வரலாம், எனவே மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உடன் இருந்து தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். வெற்றி பெறும் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெறப் போகிறது.
வியாபாரிகள் வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். குறைந்த முதலீட்டில் புதிய வியாபாரம் தொடங்கலாம்.  உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். கலைஞர்கள் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். பதவிகள் வந்து சேரும்.  மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பது நல்லது. விவசாயம் சாதாரணமாக நடக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.  தொடர்ந்து நற்பலனை பெறலாம். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை. அதிகமாக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். முன்னேற்றத்திற்கு வழி காண்பீர்கள். மேற்படிப்பில் எதிர்பார்த்திருந்த துறை கிடைக்கும். 
விவசாயம் சிறப்பாக நடக்கும். ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் புதிய நிலம் வாங்கலாம். பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்களிடம் சேரும் முன் எச்சரிக்கை தேவை. நினைக்கின்ற காரியங்களனைத்தும் சுணக்கமின்றி நடைபெறும். போட்டி பொறாமை எதிர்ப்புகளை சிறப்பாக சமாளித்து விடுவீர்கள்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். முடிந்தவரை ராகு கேது ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்து வரவும்.

No comments: