Friday, July 28, 2017

ராகு கேது பெயர்ச்சி ஹோமம் மிகப் பெரிய வெற்றி

ராகு கேது பெயர்ச்சி ஹோமம் மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. இந்த நிகழ்வு வெற்றி பெற ஆசீர்வாதம் செய்த எனது குருநாதர் பெருங்குளம் குப்பு ஜோஸ்யர், வெங்கிடாஜல் ஜோஸ்யர் - பெருங்குளம் மாயக்கூத்தர் - பெருங்குளம் திருவழுதீஸ்வரர் - பெருங்குளம் காவல் தெய்வம் பத்திரகாளியம்மன் - எம் குலதெய்வம் சொரிமுத்தையன் ஆகியோருக்கு என் நமஸ்காரம்.
இந்த நிகழ்ச்சி வெற்றி பெற மிகக் கடுமையாக உழைத்த எனது தகப்பனார் பெருங்குளம் சுப்பிரமணிய ஜோஸ்யர், எனது தாயார் - எனது மாமனார் ஸ்ரீமான் பிரகாஷ் சர்மா, எனது மாமியார் ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
எனது மனைவி ஸ்ரீமதி செல்விக்கு Selvee Prakasam நன்றிகள்.
நிகழ்ச்சியின் முக்கிய விஷயங்கள்:
ஹோமத்தில் மொத்தமாக 6500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
உலக நன்மைக்காகவும் - மழை வர வேண்டியும் - விவசாயம் செழிக்கவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கும் தாந்த்ரீக ஜோதிடஸ்ரீ வாமனன் சேஷாத்ரிVamanan Sesshadri அவர்கள் வந்திருந்து ஆசீர்வாதம் செய்தார். மாயவரத்தான் அண்ணா மூலமாக அதிகம் பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஹோமம் முழுமைக்கும் ஆசாரியனாக இருந்து அம்பாள் உபாசகர் ஸ்ரீபரணிகுமார் Bharani Kumar ஸ்வாமிஜி அருளினார்.
குரோம்பேட்டை அஸ்ட்ரோ முரளி - மடிப்பாக்கம் ராகேஷ் அண்ணா Ram Prakash, ராம்பிரசாத் அண்ணா Ram Prasad - அம்பத்தூர் கிருஷ்ணகுமார் அண்ணா, ராமநாதன் அண்ணா, தியாகராஜன் அண்ணா, கிருஷ்ணமூர்த்தி அண்ணா ஆகியோர் ஹோமம் முழுமைக்கும் உடனிருந்து உதவினார்கள்.
அன்புத்தம்பி நாகராஜன் Nagarajan Subi, ரவிசேகர் VS Ravi Sekarஆகியோர் என் அருகில் இருந்து அனைத்து விஷயங்களையும் மேற்பார்வை செய்தார்கள்.
அன்புத்தங்கை கிருத்திகா தன் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட 45 நாட்களுக்கும் மேலாக இதற்காக உழைத்தார்.
அலங்கார நாயகன் அடைக்கப்பன் Adaikappan Alangaram தனது அலங்கார திறமையின் மூலம் அருமையான அலங்காரம் செய்திருந்தார்.
திரு.அருண்பிரசாத் ArUn SuMo அவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த நிகழ்விற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
அம்பத்தூர் சாஸ்தா கேட்டரிங் திரு.நாராயணன் மூலமாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னபிரசாதம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவிடாமல் கொடுக்கப்பட்டது.
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் தீப ஆராதனை செய்யப்பட்ட போது திருமுல்லைவாயில் சிவனடியார் பெருங்கூட்டத்தின் சிவஸ்ரீ இந்திரா அம்மையாரின் சங்க நாதம் ஒலிக்கப்பட்டது.
மேற்சொன்ன அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஸங்கல்பம் செய்யப்பட்டது.
சரியாக 12 மணிக்கு லலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டு - அம்பாளுக்கு ஹோமத்தில் புடவை அர்ப்பணம் செய்யப்பட்டது.
மதியம் 12.30 மணிக்கு அம்பத்தூர் கலாக்ஷேத்ராவின் பரத நாட்டிய நிகழ்ச்சி அரங்கேறியது.
மதியம் 1 மணிக்கு திருப்புகழ் பாராயணம் செய்யப்பட்டது.
மாலை 4.30க்கு அம்மன் அருள் சுந்தராஜ சர்மாவின் அம்மனின் ஆடல் என்ற சொற்பொழிவு நடைபெற்றது.
மாலை 5.00 மணிக்கு மஹாபாரத சிம்மம் மன்னார்குடி GG வெங்கட்ராமன் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
மாலை 5.15க்கு பிரஸ்ணம் பார்க்கப்பட்டது.
மாலை 5.45க்கு ராகுவிற்கும் கேதுவிற்கும் தனித்தனியாக பூர்ணாகுதி நடைபெற்றது.
மாலை 6.15 மணிக்கு ராசிபலன் சொல்ல ஆரம்பித்து நிகழ்ச்சி 7.30 மணிக்கு இனிதே நிறைவடைந்தது.

No comments: