Thursday, August 17, 2017

போர் மூழுமா?

போர் மூழுமா?

அதிக சொந்தங்கள் என்னிடம் கேட்கும் கேள்வி.

தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியா - சீன யுத்தம் வராது.

மேலும் குரு பெயர்ச்சிக்குப் பிறகான காலகட்டத்தில் ராஜாங்க ரீதியில் அதிக அன்னியோன்னியம் ஏற்பட்டு முடிவு மக்களுக்கு சாதகமாக இருக்கும்.





12.02.2019க்குப் பிறகு கேது சனியுடன் தனுசு ராசியில் இணையும் போது மிதுன ராசியில் இருக்கும் ராகுவிற்கு சனி பார்வை ஏற்படும். அந்த சமயத்தில் மிகப் பெரிய போர் அபாயம் உலக நாடுகளில் ஏற்படும். 

ஆனாலும் குருவின் சார பலனால் மிகப் பெரிய அளவில் உயிர்சேதம் தவிர்க்கப்படும். 

12.02.2019 முதல் 10.10.2020 வரையில் சில காலம் 
ராகு மிதுன ராசியில் சுய சாரம் பெறும் காலகட்டத்தில் சனி பகவான் சூரியன் சாரத்தில் இருப்பார். ராஜாங்க ரீதியாக ஏமாற்று வேலைகள் மற்றும் சொல்லொன்னாத் துயரம் நிறைய நடக்கும். உதாரணமாக ஆயுத கொள்முதலில் ஊழல் தொடங்கி கைது செய்யப்படும் கைதிகளை மனித உரிமை மீறல் வரை நிறைய நடக்கும். அரபு நாடுகளில் பிரச்சனைகள் அதிகமாகும். அமேரிக்காவிற்கு இந்த காலகட்டம் போராட்டமாகவும் அதிக பிரச்சனையுள்ள காலகட்டம். இது வரபோகும் காலம்.

No comments: