Tuesday, September 19, 2017

இன்று மஹாளய பக்ஷ அமாவாசை.

இன்று மஹாளய பக்ஷ அமாவாசை

கடவுள் இருக்கிறாரா என்பது விவாதத்திற்குரிய விஷயம். ஆனால் நமது முன்னோர்கள் இருந்தது உண்மைதானே?




புரட்டாசி மாசம் என்பது பூமியினுடைய நீள் வட்ட பாதையில் பூமி - சூரியனுக்கு மிக அருகில் செல்லும் காலமே புரட்டாசி ஆகும். இந்த காலகட்டத்தில் நமது முன்னோர்களை வழிபடுவது கட்டாயமாகும்.

இன்று - 19.09.2017 - செவ்வாய்கிழமை - முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வதன் மூலம் நமது குறைகளை நிவர்த்தி செய்ய முடியும்.

குறிப்பு:
அமாவாசை திதியானது இன்றா நாளையா என பெரிய குழப்பம் நிலவி வருகிறது.

சைவம் சார்ந்த மரபினுருக்கு இன்றும்(19.09.2017) - வைணவம் சார்ந்த மரபினருக்கு நாளையும்(20.09.2017) அமாவாசையாகும். 

எந்த கடமைகள் இருந்தாலும் முதலில் இன்று முன்னோர்களுக்கு முடித்து விட்டு பின் செய்வது சிறந்தது.

தந்தையார் இல்லாதவர்கள் கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். 

தந்தையார் இருப்பவர்கள் இன்று காலை முன்னோர்களை நினைத்து வணங்குவது நன்மை தரும்.

வீட்டில் யாரேனும் இறந்திருந்தாலும் கட்டாயம் இன்றைய தினம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com

No comments: