Friday, January 5, 2018

ஜோதிட பரிகாரங்களை அணுகுவது எப்படி?

ஜோதிட பரிகாரங்களை அணுகுவது எப்படி?
எந்த சூழ்நிலையிலும் ஏதாவது ஜோதிடர் (நான் உட்பட) பயமுறுத்தும் வகையில் பலன் சொன்னால் உடனடியாக நம்பக்கூடாது. வேறு ஜோதிடரிடமும் சென்று கலந்துரையாட வேண்டும். 

எந்த பலனையும் யதார்த்தமாக எடுத்துக் கொள்ள பழகிக் கொள்வது அவசியம். உதாரணமாக மூல நக்ஷத்த்திரங்களில் பிறந்தவர்களுக்கு தற்பொது ஜென்ம சனி நடைபெற்று வருகிறது. எந்த விஷயங்களிலும் சிறிது தடை தாமதம் ஏற்படலாம். எனவே எதைச் செய்தாலும் திட்டமிடல், விடாமுயற்சி, தன்னம்பிக்கை தளர விடாமை போன்றவையை கடைபிடிக்க வேண்டும்.



7.30 பேருந்துக்கு 7.28க்கு வீட்டிலிருந்து கிளம்பிப் போய் பேரூந்தை விட்டு விட ஜென்ம சனி காரணம் கிடையாது. 7.30 பேரூந்துக்கு 7.15க்கு பேரூந்து நிறுத்தத்தில் இருப்பது அவசியம். சோம்பேறித்தனத்தை அறவே சனி பகவானுக்கு பிடிக்காது.

எந்த பெரிய பரிகாரம் செய்தாலும் - வாழ்க்கை நடைமுறையில் மாற்றம் கொண்டு வராத வரை நம் வாழ்வில் சிக்கல்கள் இருக்கும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண் ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

No comments: